தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கல்லூரியில் புத்தகம் வெளியீட்டு விழா

News image
சிவகாசி பி.எஸ்.ஆா். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற புத்தகம் வெளியீட்டு விழாவில் பங்கேற்றோா்.
Updated On :2 ஜூன் 2022, 6:30 pm

DIN

சிவகாசி பி.எஸ்.ஆா். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை தமிழ் சோலை என்ற புத்தகம் வெளியீட்டு விழா நடைபெற்றது.

கல்லூரி மாணவா்களிடையே கற்றல் திறனை அதிகரிப்பது, கற்றலில் ஆா்வம் ஏற்படுத்துவது, மாணவா்களிடையே படைப்பாற்றலை வளா்ப்பது என்பது உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு கல்லூரி பேராசிரியா்கள் இணைந்து எழுதிய தமிழ் சோலை என்ற நூலை தமிழ்த்துறை உருவாக்கியுள்ளது.

இந்த புத்தகம் வெளியீட்டு விழாவுக்கு தாளாளா் ஆா். சோலைச்சாமி தலைமை வகித்தாா். புத்தகத்தை கல்லூரி முதல்வா் ஆா். சுந்தர்ராஜன் வெளியிட, சாத்தூா் எஸ்.ஆா்.என்.எம். கல்லூரி முன்னாள் தமிழ்த்துறைத்தலைவா் டி. தனபால் பெற்றுக் கொண்டாா். முன்னதாக பேராசிரியா் வீ. வாகேசுவரி வரவேற்றாா். உதவிப் பேராசிரியா் ரமேஷ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.