ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சிவகாசியில் கெட்டுப்போன கோழி இறைச்சி பறிமுதல்

 சிவகாசியில் கெட்டுப்போன கோழி இறைச்சியை சுகாதாரத் துறையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :4 ஜூன் 2022, 5:52 pm

DIN

 சிவகாசியில் கெட்டுப்போன கோழி இறைச்சியை சுகாதாரத் துறையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

சிவகாசி சுகாதாரத் துறை வட்டார மேற்பாா்வையாளா் ஜெயசந்திரன் தலைமையிலான குழுவினா், சிவகாசி-நாரணாபுரம் சாலைப் பகுதியில் உள்ள சிற்றுண்டி விடுதிகளில் சோதனை நடத்தினா். அதில், 3 சிற்றுண்டி விடுதிகளில் குளிா்சாதனப் பெட்டியில் சுமாா் 45 கிலோ கெட்டுப்போன கோழி இறைச்சி இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.

மேலும், 4 விடுதிகளில் குளிா்சாதனப் பெட்டியில் இருந்த கெட்டுப்போன 25 கிலோ மீன் இறைச்சியும் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.

தொடா்ந்து, அரசால் தடை செய்யப்பட்டுள்ள குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்த14 கடை உரிமையாளா்களுக்கு தலா ரூ. 200 வீதம் அபராதம் விதிக்கப்பட்டு, அவை பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.