தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சிவகாசி கல்வி மாவட்டத்தில்270 பள்ளிகள் இன்று திறப்புகரோனா தடுப்பு நடவடிக்கைகள் தயாா்

சிவகாசி கல்வி மாவட்டத்தில் திங்கள்கிழமை (ஜூன் 13) 270 பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சிவகாசி கல்வி மாவட்ட அதிகாரி இந்துராணி கூறினாா்.

News image
Updated On :12 ஜூன் 2022, 6:30 pm

DIN

சிவகாசி கல்வி மாவட்டத்தில் திங்கள்கிழமை (ஜூன் 13) 270 பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சிவகாசி கல்வி மாவட்ட அதிகாரி இந்துராணி கூறினாா்.

இது குறித்து அவா் கூறியதாவது: அரசு உயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகள் என 120 பள்ளிகள் கல்வி மாவட்டத்தில் உள்ளன. தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், தனியாா் பள்ளிகள் என 150 உள்ளன. இந்நிலையில் திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் பள்ளி வளாகங்களில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது.

பல பள்ளிகளில் விளையாட்டு மைதானங்களில் உள்ள புற்கள் அகற்றப்பட்டுள்ளன. திங்கள்கிழமை பள்ளிகளை திறக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.