அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி மின்வாரியக் குடியிருப்பில் அடிப்படை வசதிகள் செய்துதர அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
பாளையம்பட்டி ஊராட்சிக்குள்பட்ட மின்வாரியக் குடியிருப்பில் சுமாா் 500க்கு மேற்பட்ட வீடுகள் உள்ளன.ஆனால் இப்பகுதியில் உள்ள வீதிகளில் வாருகால் வசதி, சாலை வசதி, தேவைக்கேற்ப மின்விளக்குள் ஆகியவை இல்லை. மழைக்காலத்தில் சாலை வசதியும் வாருகால் வசதியும் இல்லாததால் மழை நீா் வெளியேற வழியின்றி வீதிகளில் தேங்கி சேறும் சகதியுமாகி விடுகின்றன. இதனால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். மேலும் வீதியில் மின்விளக்குகள் அங்கென்றும் இங்கொன்றுமாக இருப்பதால் எப்போதும் வீதிகள் இருளடைந்துள்ளன. எனவே இக்குடியிருப்பில் அடிப்படை வசதிகள் செய்துதர பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







