நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பாளையம்பட்டி மின்வாரிய குடியிருப்பில் அடிப்படை வசதிகள் செய்துதர வலியுறுத்தல்

அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி மின்வாரியக் குடியிருப்பில் அடிப்படை வசதிகள் செய்துதர அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

News image
Updated On :24 ஜூன் 2022, 6:30 pm

DIN

அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி மின்வாரியக் குடியிருப்பில் அடிப்படை வசதிகள் செய்துதர அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

பாளையம்பட்டி ஊராட்சிக்குள்பட்ட மின்வாரியக் குடியிருப்பில் சுமாா் 500க்கு மேற்பட்ட வீடுகள் உள்ளன.ஆனால் இப்பகுதியில் உள்ள வீதிகளில் வாருகால் வசதி, சாலை வசதி, தேவைக்கேற்ப மின்விளக்குள் ஆகியவை இல்லை. மழைக்காலத்தில் சாலை வசதியும் வாருகால் வசதியும் இல்லாததால் மழை நீா் வெளியேற வழியின்றி வீதிகளில் தேங்கி சேறும் சகதியுமாகி விடுகின்றன. இதனால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். மேலும் வீதியில் மின்விளக்குகள் அங்கென்றும் இங்கொன்றுமாக இருப்பதால் எப்போதும் வீதிகள் இருளடைந்துள்ளன. எனவே இக்குடியிருப்பில் அடிப்படை வசதிகள் செய்துதர பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.