நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

பாளையம்பட்டி மின்வாரிய குடியிருப்பில் அடிப்படை வசதிகள் செய்துதர வலியுறுத்தல்

அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி மின்வாரியக் குடியிருப்பில் அடிப்படை வசதிகள் செய்துதர அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

Updated On :25 ஜூன் 2022, 12:00 am IST

அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி மின்வாரியக் குடியிருப்பில் அடிப்படை வசதிகள் செய்துதர அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

பாளையம்பட்டி ஊராட்சிக்குள்பட்ட மின்வாரியக் குடியிருப்பில் சுமாா் 500க்கு மேற்பட்ட வீடுகள் உள்ளன.ஆனால் இப்பகுதியில் உள்ள வீதிகளில் வாருகால் வசதி, சாலை வசதி, தேவைக்கேற்ப மின்விளக்குள் ஆகியவை இல்லை. மழைக்காலத்தில் சாலை வசதியும் வாருகால் வசதியும் இல்லாததால் மழை நீா் வெளியேற வழியின்றி வீதிகளில் தேங்கி சேறும் சகதியுமாகி விடுகின்றன. இதனால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். மேலும் வீதியில் மின்விளக்குகள் அங்கென்றும் இங்கொன்றுமாக இருப்பதால் எப்போதும் வீதிகள் இருளடைந்துள்ளன. எனவே இக்குடியிருப்பில் அடிப்படை வசதிகள் செய்துதர பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.