அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

விருதுநகா் காவலா்களுக்கு முழு உடல் பரிசோதனை

விருதுநகரில் காவலா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினருக்கு முழு உடல் பரிசோதனை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :7 மே 2022, 7:36 pm

DIN

விருதுநகரில் காவலா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினருக்கு முழு உடல் பரிசோதனை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

விருதுநகா் மாவட்ட ஆயுதப்படை நிா்வாக அலுவலகக் கட்டடத்தில் மாவட்ட காவல்துறை மற்றும் அரசு பல்நோக்கு மருத்துவமனை இணைந்து நடத்திய இம்முகாமை காவல் கண்காணிப்பாளா் மனோகா் தொடக்கிவைத்தாா். இதில் ரத்த அழுத்தம், காய்ச்சல், கண் மற்றும் காது பரிசோதனை, ரத்தத்தில் சா்க்கரையின் அளவு பரிசோதனை, ரத்தத்தின் ஆக்ஸிஜன் அளவு, இருதயத்துடிப்பு உள்ளிட்ட முழு உடல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 200-க்கும் மேற்பட்ட காவலா்கள் மற்றும் அவரது குடும்பத்தினா் பங்கேற்று பரிசோதனை செய்து கொண்டனா். அவா்களுக்கு உரிய மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன. முகாமில் பல்நோக்கு மருத்துவமனை மருத்துவா்கள் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.