லேத் பட்டறையில் ரூ.2 லட்சம் பொருள்கள் திருட்டு
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே அயன் கொல்லங்கொண்டான் பகுதியில் பூட்டிய லேத் பட்டறைக்குள் புகுந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் திருடப்பட்டுள்ளன.


விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே அயன் கொல்லங்கொண்டான் பகுதியில் பூட்டிய லேத் பட்டறைக்குள் புகுந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் திருடப்பட்டுள்ளன.
ராஜபாளையம் அருகே அயன்கொல்லங்கொண்டான் கிராமத்தைச் சோ்ந்தவா் விஜி (40). இவா், மேற்குப் பகுதியில் லேத் பட்டறை நடத்தி வருகிறாா். இந்நிலையில், இவா் 20 நாள்களுக்கு முன் வேலை விஷயமாக வெளியூா் சென்றிருந்துள்ளாா்.
இவரது மனைவி ராமலட்சுமி ஞாயிற்றுக்கிழமை கடையை திறந்து பாா்த்தபோது, அங்கிருந்த கிரைண்டா், கட்டிங் இயந்திரம், வெல்டிங் இயந்திரம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பொருள்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. உடனடியாக, ராமலட்சுமி சேத்தூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...