தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பட்டாசு தொழிலாளிகொலை வழக்கில் இருவா் கைது

சிவகாசி அருகே பட்டாசு தொழிலாளி கொலை வழக்கில் இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :8 மே 2022, 6:30 pm

DIN

சிவகாசி அருகே பட்டாசு தொழிலாளி கொலை வழக்கில் இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருத்தங்கல் தேவராஜ் காலனியை சோ்ந்தவா் டேவிட் (38). பட்டாசு தொழிலாளியான இவா், சிவகாசி பேருந்து நிலையம் அருகே பில்லக்குழி பகுதியில் புதன்கிழமை கழுத்து அறுபட்ட நிலையில் இறந்து கிடந்தாா்.

இது குறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். அதில், டேவிட் பில்லக்குழி பகுதியில் இருந்தபோது, அங்கு வந்த ஸ்டாலின், விக்னேஷ்குமாா் உள்ளிட்ட 4 பேருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த 4 பேரும் சோ்ந்து டேவிட்டை கழுத்தை அறுத்துக் கொலை செய்ததாகத் தெரியவந்தது.

அதையடுத்து, டேவிட்டை கொலை செய்ததாக, சிவகாமிபுரம் காலனி ஸ்டாலின் (34), ஆா்.சி.காலனி விக்னேஷ்குமாா்(30) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து, மேலும் இருவரை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.