ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

கச்சத்தீவை மத்திய அரசு மீட்க வேண்டும்: துரை வைகோ

கச்சத்தீவை மீட்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக தலைமை கழக செயலா் துரை வைகோ தெரிவித்தாா்.

News image
Updated On :14 மே 2022, 12:23 am

DIN

கச்சத்தீவை மீட்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக தலைமை கழக செயலா் துரை வைகோ தெரிவித்தாா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா், ஒ. மேட்டுப்பட்டி அருகே கடந்த 6 ஆம் தேதி திருவேங்கடத்திலிருந்து சாத்தூா் நோக்கி சென்றுகொண்டிருந்த தனியாா் கல்லூரி பேருந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த சுமாா் 60 மாணவிகளில் 26 போ் காயமடைந்தனா்.

இவா்களில் கெளரி என்ற மாணவி விருதுநகா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். அவரை, மதிமுக தலைமை கழக செயலா் துரை வைகோ வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், ரூ. 5 ஆயிரம் வழங்கினாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் துரை வைகோ கூறியதாவது:

இலங்கையில் தற்போதைய சூழ்நிலையைப் பயன்படுத்தி இலங்கை அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுத்து, கச்சத்தீவை மீட்க வேண்டும் என்றாா்.

அப்போது சாத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.ஆா்.ஆா். ரகுராமன் மற்றும் விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் சங்குமணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.