தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சொக்கநாதன்புத்தூா் மாரியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் தேரோட்டம்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூா் மாரியம்மன் கோயிலில் புரட்டாசி பொங்கல் தேரோட்ட விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :14 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூா் மாரியம்மன் கோயிலில் புரட்டாசி பொங்கல் தேரோட்ட விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில், புரட்டாசி பொங்கல் தோ் திருவிழா கடந்த 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி, நாள்தோறும் மாலை வேளையில் ரிஷப வாகனம், சிம்ம வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் மாரியம்மன் எழுந்தருளி வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஏ.கே.ஆா். குழுமத் தலைவா் காமராஜ், அவரது

குடும்பத்தினா் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தைத் தொடக்கி வைத்தனா்.

விழாவில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் காப்புக் கட்டி, தேருக்கு பின்னால் விழுந்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.