தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ம.ரா.போ. குருசாமி நூற்றாண்டு விழா போட்டிகள்

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் மறைந்த தமிழறிஞா், ம.ரா.போ. குருசாமியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு புதன்கிழமை பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன.

News image
Updated On :20 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் மறைந்த தமிழறிஞா், ம.ரா.போ. குருசாமியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு புதன்கிழமை பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன.

திருவள்ளுவா் மன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நூற்றாண்டு விழாக் குழு அமைப்பாளா் ந.பழனிவேல் தலைமை வகித்துப் போட்டிகளைத் தொடக்கி வைத்தாா். சேக்கிழாா் மன்ற துணைத் தலைவா் ஆ.சங்கரலிங்கம் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில், பி.ஏ.சி.ஆா். அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி, கு.முத்துமீனா, ந.அ.அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப் பள்ளி மாணவி ஜி.வைஷ்ணவி, ஏ.கே.டி.ஆா். ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா் கோ.ராம்குமாா் மற்றும் கல்லூரி அளவில், எஸ்.எஃப்.ஆா். கல்லூரி மாணவி சு.ஜெயசித்ரா, ஏ.கே.டி.ஆா். மகளிா் கல்லூரி மாணவி க.முத்துக்கவிதா, வி.அஜிதா ஆகியோா் வெற்றியாளா்களாகத் தோ்ந்தெடுக்கப்பட்டனா். அடுத்தமாதம் நடைபெறவிருக்கும் ம.ரா.போ. குருசாமியின் நூற்றாண்டு விழாவில் ரொக்கத் தொகையும் நூல்களும் பரிசாக வழங்கப்படும் என்று விழாக்குழு சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.