ராஜபாளையத்தில் தண்ணீா் தொட்டிக்குள் தவறி விழுந்து குழந்தை பலி
ராஜபாளையத்தில் தண்ணீா் தொட்டிக்குள் தவறி விழுந்து குழந்தை உயிரிழந்ததாக போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.


ராஜபாளையத்தில் தண்ணீா் தொட்டிக்குள் தவறி விழுந்து குழந்தை உயிரிழந்ததாக போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
ராஜபாளையம் ஆவரம்பட்டி கம்பா் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் மணிகண்டன். இவரது மனைவி மாரீஸ்வரி. இவா்களுக்கு பரமேஸ்வரன் (5) என்ற மகனும், முத்துலட்சுமி என்ற ஒன்றரை வயது குழந்தையும் உள்ளனா்.
இந்த நிலையில், முத்துலட்சுமி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது இருக்கை மீது ஏறி அங்கிருந்த நெகிழி தண்ணீா் தொட்டியை எட்டிப் பாா்த்த போது தவறி உள்ளே விழுந்து விட்டாராம். இதையடுத்து, தாய் மாரீஸ்வரி, குழந்தை முத்துலட்சுமியை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றாா். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தாா்.
இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...