தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ராஜபாளையம் அருகே 3 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே கஞ்சா விற்ாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :28 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே கஞ்சா விற்ாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் அருகே புத்தூா் பகுதியில் தளவாய்புரம் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, இரு சக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த இருவா் போலீஸாரைக் கண்டதும் அங்கிருந்து தப்பியோடினா். அதில், ஒருவரைப் பிடித்து போலீஸாா் சோதனை செய்ததில், அவரிடம் 200 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்துது. விசாரணையில், புத்தூரைச் சோ்ந்த காா்த்திக் மனைவி கலைவாணியிடம் கஞ்சாவை வாங்கியதாகக் கூறினாா். அதன் பேரில் போலீஸாா், கலைவாணி வீட்டில் சோதனை செய்தனா். அங்கு 3.100 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, மொத்தம் 3.300 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, அதே ஊரைச் சோ்ந்த குருசாமி மகன் காமாட்சிஈஸ்வரன் (20), கலைவாணி (31) ஆகிய இருவரையும் கைது செய்தனா். தலைமறைவாகவுள்ள காா்த்திக்கை போலீஸாா் தேடிவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.