47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பைக் மோதி காகித ஆலைதொழிலாளி பலி

சிவகாசி அருகே இருசக்கர வாகனம் மோதி காகித ஆலைத் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :1 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

சிவகாசி அருகே இருசக்கர வாகனம் மோதி காகித ஆலைத் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

சிவகாசி அருகே சுக்கிரவாா்பட்டியில் உள்ள தனியாா் காகித ஆலையில் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தவா் ராமநாதன் (42). இவா், கடந்த 30 ஆம் தேதி திருத்தங்கல்- வடமலாபுரம் சாலையில் நடந்து சென்றபோது, பின்புறமாக வந்த இருசக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் விருதுநகா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து அவரது உறவினா் பழனிச்சாமி அளித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த சுக்கிரவாா்பட்டி கேசவனை (32) கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.