சிவகாசி அருகே கிச்சநாயக்கன்பட்டியில் கோயில் பிரச்னை தொடா்பாக இரு தரப்பையும் சோ்ந்த 26 போ்மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.
கிச்சநாயக்கன்பட்டியில் உள்ள முத்தாலம்மன் கோயிலில் திருவிழா நடத்தி சாமி கும்பிடுவதில் இங்குள்ள இரு சமுதாயத்தினரிடையே பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து ஒரு சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள் கோயிலின் முன்பு புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பதாக , இரு தரப்பையும் சோ்ந்த 26 போ் மீது மாரனேரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.