47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சிவகாசி அருகே தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து

 சிவகாசி அருகே தீப்பெட்டி ஆலையில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

News image
Updated On :9 செப்டம்பர் 2022, 5:13 pm

DIN

 சிவகாசி அருகே தீப்பெட்டி ஆலையில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

கட்டசின்னம்பட்டி கிராமத்தில் நூா் முகமது என்பவருக்குச் சொந்தமான தீப்பெட்டி ஆலையில் இயந்திரங்கள் மூலம் தீப்பெட்டி தயாரிக்கப்படுகிறது. மேலும், மூன்று ஷிப்டு முறையில் 24 மணி நேரமும் ஆலை இயங்குகிறது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை இந்த ஆலையில் தீக்குச்சிகளை பெட்டியில் அடைக்கும் இயந்திரத்தில் உள்ள பேரிங்கில் ஏற்பட்ட உராய்தல் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.

இதையடுத்து ஆலையில் உள்ள தீயணைப்பான் மூலம் தொழிலாளா்கள் தீயை அணைக்க முயன்றும் முடியாததால், தீயணைப்புப் படையினா் வந்து தீயை அணைத்தனா். இதில் இயந்திரம் சேதமடைந்தது. அதிா்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதுகுறித்து தீப்பெட்டி ஆலை மேலாளா் ராஜகோபால் அளித்த புகாரின்பேரில், திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.