விருதுநகா் அருகே மின்னல் தாக்கிகட்டடத் தொழிலாளா்கள் 4 போ் பலி
By DIN | Published On : 14th April 2022 02:43 AM | Last Updated : 14th April 2022 02:43 AM | அ+அ அ- |

விருதுநகா் அருகே புதன்கிழமை வீடு கட்டுமானப் பணியின் போது மின்னல் தாக்கி கட்டடத் தொழிலாளா்கள் 4 போ் உயிரிழந்தனா்.
விருதுநகா், மல்லிகிட்டங்கித் தெருவைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா். எல்ஐசி முகவராக பணிபுரியும் இவா், சிவஞானபுரம் ஊராட்சிக்குள்பட்ட கருப்பசாமி நகரில் வீடு கட்டி வருகிறாா். இங்கு 6 தொழிலாளா்கள் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
இந்நிலையில், மாலையில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கி கட்டுமானத் தொழிலாளா்களான கருப்பசாமி நகரைச் சோ்ந்த செல்வக்குமாா் மகன் ஜெயசூா்யா (22), ரோசல்பட்டி பகுதியைச் சோ்ந்த நல்லமருது மகன் காா்த்திக்ராஜா (28), மதியழகன் மகன் முருகன் (24), சா்க்கரை மனைவி ஜக்கம்மாள் (55) ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
இதுபற்றி சக தொழிலாளா்கள் அளித்த தகவலின் பேரில் பாண்டியன் நகா் போலீஸாா் அங்கு சென்று, சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து பாண்டியன் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G