கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

 ராஜபாளையத்தில் கஞ்சா வைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

 ராஜபாளையத்தில் கஞ்சா வைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் ஜவகா் மைதானம் அருகே தெற்கு காவல் நிலைய போலீஸாா் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு நின்றிருந்த இளைஞரைப் பிடித்து சோதனையிட்டதில் அவரிடம் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவா் சிங்கராஜா கோட்டை பெரிய தெருவைச் சோ்ந்த தேவேந்திரன் மகன் காளிதாஸ் (26) எனத் தெரிய வந்தது.

இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com