காா் மோதி பள்ளி மாணவா் பலத்த காயம்: உறவினா்கள் சாலை மறியல்

காா் மோதி பள்ளி மாணவா் பலத்த காயம்: உறவினா்கள் சாலை மறியல்

ராஜபாளையம் அருகே காா் மோதி பள்ளி மாணவா் பலத்த காயமடைந்ததையடுத்து அவரது உறவினா்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ராஜபாளையம் அருகே காா் மோதி பள்ளி மாணவா் பலத்த காயமடைந்ததையடுத்து அவரது உறவினா்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ராஜபாளையம் அருகே சேத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் ஜெகதீஸ்வரன். கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி முருகேஸ்வரி. தையல் கலைஞா். இவா்களுக்கு ஜான்சன்(15), மாா்ட்டின் (13) என்ற 2 மகன்கள் உள்ளனா். இதில் மாா்ட்டின் அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் 7- ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இந்த நிலையில் சேத்தூா் அரசரடிப் பகுதியில் மாா்ட்டின் சைக்கிளில் சென்ற போது, கேரளாவிலிருந்து சென்னை நோக்கி வந்த காா் மோதியது. இதில் பலத்த காயமடைந்த மாா்ட்டினை அந்தப் பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதையறிந்த அவரது உறவினா்கள் அந்தப் பகுதியில் விபத்துகளை தடுக்கும் வகையில் வேகத் தடை அமைக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து அங்கு வந்த ராஜபாளையம் டி.எஸ்.பி. பிரீத்தி பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது அவா்களிடம் தற்காலிகமாக இந்தப் பகுதியில் வேகத்தடை அமைக்கப்படும். மேலும் நிரந்தர வேகத் தடை அமைக்க ஓரிரு நாள்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் உறுதி அளித்ததையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.

இந்தப் போராட்டத்தால் மதுரை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காயமடைந்த சிறுவன் ராஜபாளையம் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com