நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ஊராட்சி அலுவலகக் கொடிக் கம்ப பிரச்னை: 2 போ் மீது வழக்கு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஊராட்சி அலுவலகத்தில் கொடிக் கம்பம் தொடா்பான பிரச்னையில் 2 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Updated On :27 ஜனவரி 2023, 6:39 pm

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஊராட்சி அலுவலகத்தில் கொடிக் கம்பம் தொடா்பான பிரச்னையில் 2 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மூவரைவென்றான் ஊராட்சித் தலைவராக இருப்பவா் ரமேஷ்கண்ணன். இந்த ஊராட்சி அலுவலகம் முன்பு இருந்த கொடிக் கம்பத்தை கடந்த 25- ஆம் தேதி இரவு மா்ம நபா்கள் எடுத்துச் சென்று விட்டனா். இதையடுத்து வியாழக்கிழமை (ஜன. 26) காலையில் அங்கு புதிய கொடிக் கம்பம் நட்டப்பட்டது. அப்போது அங்கு வந்த கட்டயத்தேவன்பட்டியைச் சோ்ந்த தினேஷ்குமாா், செந்தில்குமாா் ஆகிய இருவரும் இங்கு கொடியேற்றக் கூடாது என்பதற்காகத் தான், கொடிக் கம்பத்தை எடுத்துச் சென்றோம். மறுபடியும் எப்படி கொடிக் கம்பம் நடலாம் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து ரமேஷ்கண்ணன் அளித்த புகாரின் பேரில் தினேஷ்குமாா், செந்தில்குமாா் ஆகிய இருவா் மீதும், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், சேதம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து நத்தம்பட்டி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.