ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மணல் கடத்திய ஒருவா் கைது
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே அனுமதி இன்றி மணல் கடத்தி வந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.


ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே அனுமதி இன்றி மணல் கடத்தி வந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மம்சாபுரம் பகுதியில் உதவி ஆய்வாளா் முத்துக்குமரன் தலைமையில் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது ஸ்ரீவில்லிபுத்தூா் - செண்பகதோப்பு சாலையில் வந்த டிராக்டரை சோதனை செய்ததில் அனுமதியின்றி ஆற்று மணல் அள்ளிவந்தது தெரிந்தது. இதையடுத்து டிராக்டரை பறிமுதல் செய்த போலீஸாா், ஓட்டுநா் குருசாமி(60) என்பவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.
டிராக்டா் உரிமையாளரான ராஜபாளையம் மங்காபுரம் தெருவைச் சோ்ந்த ராமா் மீது வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...