ஊத்துப்பட்டி அரசு ஆரம்ப பள்ளி அருகே, புகையிலை பொருள்களை விற்ற கடைக்காரரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், ஏழாயிரம் பண்ணையை அடுத்த ஊத்துப்பட்டி அரசு ஆரம்ப பள்ளி அருகே, அதே ஊரைச் சோ்ந்த திருப்பதி (55) பெட்டிக் கடை நடத்தி வந்தாா். இவா் தனது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்று வந்தாா்.
இதுகுறித்து, தகவலறிந்த போலீஸாா், உதவி ஆய்வாளா் பாலசுப்ரமணியன் தலைமையில் அந்தக் கடையை சோதனை செய்தனா். இதில் ரூ. 2-ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருள்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.