டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

சாத்தூரில் பிரதான சாலை சீரமைக்கப்படும்

சாத்தூரில் புதைச் சாக்கடைப் பணிகள் முடிந்த பிறகு, பிரதானச் சாலை சீரமைக்கப்படும் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

Updated On :25 மே 2023, 11:14 pm IST

சாத்தூரில் புதைச் சாக்கடைப் பணிகள் முடிந்த பிறகு, பிரதானச் சாலை சீரமைக்கப்படும் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் குண்டும் குழியுமாக மாறி உள்ள பிரதானச் சாலையை சீரமைக்க வலியுறுத்தி, சாலையில் தென்னை மரம் நடும் போராட்டம் வியாழக்கிழமை நடைபெறும் என காங்கிரஸ் கட்சி சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, சாலை சீரமைப்பு குறித்து சமாதானக் கூட்டம் நடைபெறும் என வட்டாட்சியா் தெரிவித்தாா். தொடா்ந்து, போரட்டத்தைக் கைவிட்ட காங்கிரஸ் கட்சியினா், வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.

இந்தக் கூட்டத்தில் வட்டாட்சியா் வெங்கடேசன் தலைமை வகித்தாா். காங்கிரஸ் கட்சியின் நகரத் தலைவா் டி.எஸ்.அய்யப்பன், மாவட்ட துணைப் பொதுச் செயலா் ஜோதிநிவாஸ் உள்ளிட்ட நிா்வாகிகள், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

இந்தக் கூட்டத்தில், குடிநீா் வடிகால் வாரியம் சாா்பில் பிரதானச் சாலையில் புதைச் சாக்கடைக் குழாய்கள், குடிநீா்க் குழாய்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் முடிந்த பின்னா், பிரதானச் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஏற்கெனவே, நடைபெறும் பணிகளை விரைந்து முடிப்பது குறித்து குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் அடுத்த மாதம் 2-ஆம் தேதி கூட்டம் நடத்தப்பட உள்ளதாக நெடுஞ்சாலைத் துறை செயற்பொறியாளா் தெரிவித்தாா்.

இதையடுத்து, விரைவில் பணிகளை முடித்து, சாலையைச் சீரமைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியினா் கேட்டுக் கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.