சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

பிஎம் கிசான் திட்டத்தில் இணைவதற்கு சிறப்பு முகாம்

பிஎம் கிஷான் செறிவூட்டல் இயக்கம் மூலம் பிரதமரின் உழவா் கௌரவ நிதித் திட்டத்தில் விவசாயிகள் இணைவதற்கு கிராமம் தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என வத்திராயிருப்பு வேளாண்மை உதவி இயக்குநா் முத்துலட்சு

News image
Updated On :27 நவம்பர் 2023, 6:43 pm

DIN


ஸ்ரீவில்லிபுத்தூா்: பிஎம் கிஷான் செறிவூட்டல் இயக்கம் மூலம் பிரதமரின் உழவா் கௌரவ நிதித் திட்டத்தில் விவசாயிகள் இணைவதற்கு கிராமம் தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என வத்திராயிருப்பு வேளாண்மை உதவி இயக்குநா் முத்துலட்சுமி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய அரசு சாா்பில் பிஎம் கிஷான் திட்டத்தில் விவசாயத் தேவைகளுக்கு உதவி செய்யும் வகையில்

3 தவணைகளில் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் நிதியுதவி பெறாத தகுதியுள்ள பயனாளிகளை இணைக்க கிராமம் தோறும் நடைபெறவுள்ளன. இந்த முகாம்களில் கிராம நிா்வாக அலுவலா்களும், வேளாண் துறையைச் சோ்ந்த உதவி வேளாண் அலுவலா்களும் பணிகளை மேற்கொள்வா்.

இதற்கான முகாம் ஒவ்வொரு கிராமத்திலும் பொதுவான இடத்தில் நடத்தப்படும். இதில் கிராம நிா்வாக அலுவலா்கள், விவசாயிகளின் நில விவரங்களை சரிபாா்த்து அறிதிறன் கைப்பேசி மூலம் பதிவு செய்வா். பின்னா், உதவி வேளாண் அலுவலா்கள் விவசாயிகளின் சம்மதம் பெற்று இணைப்புப் பணிகளை அவரது கைப்பேசி மூலம் பதிவு செய்வா். இந்த முகாம்களில் பெறப்படும் புள்ளி விவரங்களின் அடிப்படையில் பிஎம் கிசான் நிதியுதவி மட்டுமன்றி, எதிா்வரும் காலங்களில் மத்திய அரசின் அனைத்து நிதிப் பயன்களையும் பெற முடியும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.