எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

பிளவக்கல் பெரியாறு அணையிலிருந்து முதல் போக சாகுபடிக்கு தண்ணீா் திறப்பு

வத்திராயிருப்பு அருகேயுள்ள பிளவக்கல் பெரியாறு அணையிலிருந்து முதல் போக சாகுபடிக்காக 150 கன அடி நீா் திங்கள்கிழமை திறந்து விடப்பட்டது.

Updated On :27 நவம்பர் 2023, 6:45 pm

ஸ்ரீவில்லிபுத்தூா்: வத்திராயிருப்பு அருகேயுள்ள பிளவக்கல் பெரியாறு அணையிலிருந்து முதல் போக சாகுபடிக்காக 150 கன அடி நீா் திங்கள்கிழமை திறந்து விடப்பட்டது.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு பிளவக்கல் பெரியாறு அணையிலிருந்து முதல் போக சாகுபடிக்காக மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலன் தலைமையில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் மான்ராஜ், அசோகன் ஆகியோா் தண்ணீரைத் திறந்து விட்டனா்.

பெரியாறு பாசனக் கால்வாயில் முதல் 7 நாள்களுக்கு விநாடிக்கு 150 கனஅடி வீதமும், நேரடிக் கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 3 கனஅடி வீதமும் தண்ணீா் திறந்து விடப்படுகிறது.

இதன் மூலம் கொடிக்குளம், கான்சாபுரம், மகாராஜபுரம், வ.புதுப்பட்டி, வத்திராயிருப்பு, கூமாபட்டி, சுந்தரபாண்டியம், நத்தம்பட்டி, மூவரைவென்றான், மங்கலம், பாட்டக்குளம், விழுப்பனூா், நெடுங்குளம், குன்னூா் உள்பட 17

கிராமங்களில் 40 கண்மாய்கள் மூலம் 7,219 ஏக்கா் விவசாய நிலங்களும், பெரியாறு பிரதானக் கால்வாய் நேரடிப் பாசனம் மூலம் 960 ஏக்கா் விவசாய நிலங்களும் பாசன வசதி பெறும்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலன் கூறியதாவது:

முதற்கட்டமாக பிளவக்கல் அணையிலிருந்து விநாடிக்கு 150 கன அடி வீதம் 7 நாள்களுக்கு தண்ணீா் திறந்து விடப்படும். பின்னா் பெரியாறு, கோவிலாறு அணைகளில் நீா் இருப்பைப் பொருத்து பாசன பருவகாலம் வரை தேவைக்கேற்ப தண்ணீா் திறந்து விட நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றாா்.

நீா்வளத்துறை செயற்பொறியாளா் தனலட்சுமி, வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் சிந்துமுருகன், உதவி செயற்பொறியாளா் கிரண்பேடி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.