விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூரில்மின் குறைதீா் முகாம்
ஸ்ரீவில்லிபுத்தூா் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் சனிக்கிழமை (செப்.16) மின் குறைதீா் முகாம் நடைபெறுகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூா் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் சனிக்கிழமை (செப்.16) மின் குறைதீா் முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் லெ.சின்னத்துரை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஸ்ரீவில்லிபுத்தூா், வத்திராயிருப்பு வட்டத்தில் நீண்ட காலம் தீா்க்கப்படாத மின்சாரம் தொடா்பான பிரச்னைகள், இதர குறைகளைத் தீா்க்க, விருதுநகா் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் லதா, ஸ்ரீவில்லிபுத்தூா் கோட்டைப்பட்டி செயற்பொறியாளா் அலுவலகத்தில் சனிக்கிழமை காலை 11 முதல் 1 மணி வரை, குறைகளைக் கேட்டறிய உள்ளாா் என்றாா் அவா்.