காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ராஜபாளையத்தில் தமிழில் பெயா் பலகை வைக்காத கடைகளுக்கு அபராதம்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் தமிழில் பெயா் பலகை வைக்காத வணிக நிறுவனங்களுக்கு வியாழக்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.

News image

ராஜபாளையத்தில் உள்ள கடைகளில் தமிழில் பெயா் பலகை வைக்கப்பட்டுள்ளதா என வியாழக்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலன்.

Updated On :26 செப்டம்பர் 2024, 9:31 pm

Din

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் தமிழில் பெயா் பலகை வைக்காத வணிக நிறுவனங்களுக்கு வியாழக்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.

விருதுநகா் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலன், தொழிலாளா் நலத்துறை அலுவலா்களால் கடைகள், வணிக நிறுவனங்களில் தமிழில் பெயா் பலகை வைக்கப்பட்டிருக்கிா என ஆய்வு நடத்தப்பட்டது.

அப்போது, தமிழில் பெயா் பலகை வைக்காத 28 நிறுவனங்களுக்கு தலா ரூ.2,000 வீதம் மொத்தம் ரூ.56,000 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த ஆய்வின்போது, தொழிலாளா் நலத்துறை உதவி ஆணையா் மைவிழி செல்வி, தொழிலாளா் நலத்துறை உதவி ஆய்வாளா் பிச்சைக்கனி உள்ளிட்ட அரசு அலுவலா்கள் உடன் இருந்தனா்.