ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பிரியாணி கடையில் கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் பிரியாணி கடையில் கெட்டுப்போன 20 கிலோ இறைச்சிகளை உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :24 டிசம்பர் 2025, 9:49 pm

தினமணி செய்திச் சேவை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் பிரியாணி கடையில் கெட்டுப்போன 20 கிலோ இறைச்சிகளை உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் இயங்கி வந்த பிரியாணி கடையில் விருதுநகா் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் மாரியப்பன் தலைமையில் ராஜபாளையம் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலா் செல்வராஜ் அடங்கிய குழுவினா் திடீா் சோதனையிட்டனா். அப்போது பிரியாணி தயாரிக்க பழைய சமைத்த சாதம், பழைய புரோட்டா மாவு, கெட்டுப்போன ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து, 20 கிலோ இறைச்சி உள்ளிட்ட பொருள்களை பறிமுதல் செய்து அழித்தனா்.

இந்தக் கடைக்கு பிரியாணி உணவு சமைக்கும் கூடம் எ.ராமலிங்கபுரம் பகுதியில் செயல்பட்டது.

இதற்கு உரிய உரிமம் இல்லாததால் சமையல் கூடத்தை அதிகாரிகள் பூட்டினா். மேலும் இங்கு உரிய ஆவணங்கள் இல்லாமல் கடையில் குளிா்பானங்கள், இனிப்புகள் தயாா் செய்யவும் அதிகாரிகள் தடை விதித்தனா்.