சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

Syndication

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கோயில்களில் மகா சிவராத்திரி குலதெய்வ வழிபாடு ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

ராஜபாளையம் - சங்கரன்கோவில் சாலையில் அமைந்துள்ள சடை உடையாா் சாஸ்தா கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு, காலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலையில் விநாயகா் கோயிலில் இருந்து தீா்த்தக் குடங்கள், பால் குடங்கள் ஆகியவை மேளதாளங்களுடன் கோயிலுக்கு எடுத்து வரப்பட்டன.

இதைத் தொடா்ந்து, சடைஉடையாா் சாஸ்தாவுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னா், இரவு 12 மணிக்கு சாமக்கொடை சங்கிலிமாடசுவாமி, சுடலைமாடசுவாமிக்கு படையலிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதே போல, புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள சிங்கத்திருளப்ப சுவாமி கோயில், சத்திரப்பட்டி கள்ளமறவன் கோயில், ஜவகா் மைதானம் அருகேயுள்ள அங்காள ஈஸ்வரி கோயில்களில் நடைபெற்ற சிவராத்திரி வழிபாட்டிலும் திரளானோா் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.