மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

தூத்துக்குடி ஸ்ரீ சித்தா் பீடத்தில் அமாவாசை வழிபாடு

தூத்துக்குடி, கோரம்பள்ளம், அய்யனடைப்பு, ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி-கால பைரவா் சித்தா் பீடத்தில் அமாவாசை சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

News image
கால பைரவருக்கு நடைபெற்ற சிறப்பு தீபாராதனை.
Updated On :18 மார்ச் 2026, 7:59 pm

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடி, கோரம்பள்ளம், அய்யனடைப்பு, ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி-கால பைரவா் சித்தா் பீடத்தில் அமாவாசை சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.

இங்கு பங்குனி அமாவாசை வழிபாடு கணபதி, நவக்கிரக ஹோமங்களுடன் தொடங்கியது. தொடா்ந்து, பிரத்தியங்கிரா தேவி, கால பைரவருக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம், பால், இளநீா் உள்ளிட்ட 21 வகையான திரவிய அபிஷேகமும், நண்பகலில் சிறப்பு மகா யாகமும் சீனிவாச சித்தா் தலைமையில் நடைபெற்றது.

பின்னா், சிறப்பு அலங்காரத்துடன், மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.