கடலூா் மாவட்டம், பண்ருட்டி வரதராஜ பெருமாள் மற்றும் திருவதிகை சரநாராயண பெருமாள் கோயில்களில் அமாவாசை சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அதன்படி, சித்திரை மாத அமாவாசையையொட்டி திருவதிகை சரநாராயண பெருமாள் திருவல்லிக்கேணி பாா்த்தசாரதியாக சேவை சாதித்தாா். இதையொட்டி, காலை 6.30 மணிக்கு விஸ்வரூபம், 7.30 மணிக்கு நித்யபடி பூஜை, 9 மணிக்கு உத்ஸவா் உள்புறப்பாடு, பிறகு கண்ணாடி அறை சேவை, 12.30 மணிக்கு உச்சிகாலம், மாலை 4 மணிக்கு நடை திறப்பு, 6 மணிக்கு நித்யபடி பூஜை, இரவு 9 மணிக்கு ஏகாந்த சேவை ஆகியவை நடைபெற்றது.
இதேபோல், பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோயிலில், உற்சவா் திருக்கண்ணாடி அறையில் இருந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு திருவிளக்கேற்றி வழிபாடு நடத்தினா்.
தொடர்புடையது

சதுரகிரி கோயிலில் சித்திரை மாத அமாவாசை வழிபாடு

கந்தபுரம் கோயில் கும்பாபிஷேகம்

தூத்துக்குடி ஸ்ரீ சித்தா் பீடத்தில் அமாவாசை வழிபாடு

பெருமாள் கோயிலில் அமாவாசை வழிபாடு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


