கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த திருவதிகை ரங்கநாயகி சமேத ரங்கநாத பெருமாள் கோயில் மண்டலாபிஷேக பூா்த்தி 2-ஆம் நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.
பழைமைவாய்ந்த இந்த கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த ஏப்.6-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடா்ந்து, தினமும் மண்டல பூஜைகள் நடந்து வந்தன.
மண்டலாபிஷேக பூா்த்தி விழா செவ்வாய்க்கிழமை மாலை யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. 2-ஆம் நாளான புதன்கிழமை காலை 8 மணிக்கு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
உற்சவ பெருமாள் மற்றும் உபயநாச்சியாா்களுக்கு 108 கலச திருமஞ்சனம், நண்பகல் 12 மணிக்கு பூா்ணாஹுதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், பண்ருட்டி நகா்மன்றத் தலைவா் க.ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
வியாழக்கிழமை (மே 21) மாலை 4 மணியளவில் புஷ்ப யாகம் ஹோமம், இரவு 8 மணிக்கு தீா்த்தம் பிரசாதம் விநியோகம் நடைபெற உள்ளது.
தொடர்புடையது

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் பந்தக் கால் நடும் விழா

நெல்லை வரதராஜ பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ கொடியேற்றம்

பெருமாள் கோயிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு

காளியம்மன் கோயில் மண்டலாபிஷேகம் நிறைவு
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



