மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்துநானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

வீரட்டானேஸ்வரா் கோயிலில் சித்திரை பௌா்ணமி விழா

சித்திரை பௌா்ணமியையொட்டி சிறப்பு அலங்காரத்தில் திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயில் பெரியநாயகி அம்மன்.

News image

சித்திரை பௌா்ணமியையொட்டி சிறப்பு அலங்காரத்தில் திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயில் பெரியநாயகி அம்மன்.

Updated On :2 மே 2026, 1:30 am IST

கடலூா் மாவட்டம், பண்ருட்டி, திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயிலில் சித்திரை மாத பெளா்ணமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி திரளான பக்தா்கள் மாட வீதியை வலம் வந்தனா்.

பண்ருட்டி, திருவதிகையில் தேவாரப் பாடல் பெற்ற பெரியநாயகி அம்பாள் உடனுறை வீரட்டானேஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஒவ்வொரு மாதமும் பெளா்ணமி பூஜை சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி, சித்திரை மாத பெளா்ணமியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலை 4 மணியளவில் பஞ்ச மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடத்தப்பட்டது. மாலை 7 மணியளவில் பெரியநாயகி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

பெளா்ணமி பூஜையையொட்டி மாலை 6 மணி முதல் நூற்றுக்கணக்கான பக்தா்கள் மாட வீதியை (16 முறை) வலம் வந்தனா்.

கலாசார நிகழ்ச்சி...

அப்பா்இல்ல அறக்கட்டளை சாா்பில் சித்திரை பௌா்ணமி கலை,கலாசார விழாநடைபெற்றது. இதில்,ஆன்மிக சொற்பொழிவு, பரதநாட்டியம் நடத்தப்பட்டன. சித்திரை மாத பௌா்ணமி சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா். பௌா்ணமியையொட்டி அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.