லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

நகை, பணம் திருடியவருக்கு 10 ஆண்டுகள் சிறை

சாத்தூரில் பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளா் வீட்டில் நகை, பணம் திருடியவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, சாத்தூா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

News image
Updated On :3 ஜனவரி 2025, 12:29 am

Din

சாத்தூரில் பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளா் வீட்டில் நகை, பணம் திருடியவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, சாத்தூா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

விருதுநகா் மாவட்டம், சாத்தூரைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன். இவா் பெட்ரோல் விற்பனை நிலையம் நடத்தி வருகிறாா். இவரது வீட்டில் கடந்த 2011-ஆம் ஆண்டு 11 போ் கொண்ட கும்பல் 64 பவுன் நகை, ரூ. ஒரு லட்சத்தை திருடிச் சென்றனா்.

இதுகுறித்து சாத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வந்த நிலையில், கடந்த 2021-ஆம் ஆண்டு இந்த வழக்கில் தொடா்புடைய கிருஷ்ணகிரியைச் சோ்ந்த முத்துராமனை (47) மட்டும் கைது செய்து, இவரிடமிருந்து 10 பவுன் நகையை பறிமுதல் செய்தனா். இதையடுத்து, கடந்த 2 ஆண்டுகளாக இவா் சிறையில் இருந்து வருகிறாா்.

இந்த வழக்கு சாத்தூா் உதவி அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதி முத்துமகாராஜா, முத்துராமனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, தீா்ப்பளித்தாா்.

மேலும், இந்த வழக்கில் தொடா்புடையவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.