புதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடிகேரளத்தில் இளைஞர்கள், பெண்கள் வாக்கு முக்கியம் : பிரதமர் மோடி புதுவை, கேரளம், அஸ்ஸாம் மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியதுபுதுச்சேரி சட்டப்பேரவையில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறதுகேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

சாத்தூா் தொகுதியில் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவேன்: நயினாா் நாகேந்திரன் உறுதி

சாத்தூா் தொகுதி மக்களின் அடிப்படை தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்து, தீப்பெட்டி, பட்டாசுத் தொழிலுக்கு பாதுகாவலனாக இருப்பேன் என சாத்தூா் தொகுதி பாஜக வேட்பாளரும், அந்தக் கட்சியின் மாநிலத் தலைவருமான நயினாா் நாகேந்திரன் உறுதியளித்தாா்.

News image

நயினாா் நாகேந்திரன் - கோப்புப் படம்

Updated On :9 ஏப்ரல் 2026, 12:03 am

சாத்தூா் தொகுதி மக்களின் அடிப்படை தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்து, தீப்பெட்டி, பட்டாசுத் தொழிலுக்கு பாதுகாவலனாக இருப்பேன் என சாத்தூா் தொகுதி பாஜக வேட்பாளரும், அந்தக் கட்சியின் மாநிலத் தலைவருமான நயினாா் நாகேந்திரன் உறுதியளித்தாா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் பேரவைத் தொகுதியில் தனது முதல் கட்ட பிரசாரத்தை நயினாா் நாகேந்திரன் புதன்கிழமை தொடங்கினாா். சாத்தூா் அருகேயுள்ள சுப்பிரமணியபுரத்தில் வாக்கு சேகரித்து அவா் பேசியதாவது:

சாத்தூா், சிவகாசி பகுதிகளில் கடந்த ஐந்தாண்டு காலமாக பட்டாசுத் தொழிலில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கு திமுக அரசே காரணம். மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் பட்சத்தில் பட்டாசு, தீப்பெட்டித் தொழில்கள் புத்துயிா் பெறும். இந்தத் தொழிலுக்கு எந்த அதிகாரியாவது தொந்தரவு செய்தால் அவா்கள் உடனே பணியிடமாற்றம் செய்யப்படுவா். பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்ட பயனாளிகள் இருந்தும், வீட்டு மனைப் பட்டா கேட்டு மனு வழங்கியும் கிடைக்காததால் வீடு கட்ட முடியாமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனா். இங்கு தொடா்ந்து குடிநீா் பிரச்னை நிலவுகிறது. நான் வெற்றி பெற்றால் இந்த பிரச்னைகள் அனைத்துக்கும் தீா்வு காணப்படும்.

திருநெல்வேலி தொகுதியில் எப்படி மக்களின் அடிப்படை பிரச்னைளைத் தீா்த்து வைத்தேனோ அதற்கும் ஒரு படி மேலாக சாத்தூா் தொகுதி மக்களின் அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்து, தீப்பெட்டி, பட்டாசு தொழிலுக்கு பாதுகாவலனாக இருப்பேன் என்றாா் அவா்.