தவெக ஆட்சியை ஆதரிக்க முடிவு: சி.வி. சண்முகம்தமிழகத்தில் 717 மதுக்கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவு!விவசாயிகளுக்கான ரூ. 317 கோடி நிலுவை: அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவு22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் விரைவில் எஸ்ஐஆர்!தமிழக அமைச்சரவையில் இடதுசாரிகளா? மார்க்சிஸ்ட் கம்யூ. விளக்கம்நீட் தேர்வில் முறைகேடுகள்: தேசிய தேர்வு முகமை விளக்கம்புதுச்சேரி முதல்வராக என். ரங்கசாமி நாளை பதவியேற்பு!
/

ஆண்டாள் கோயிலில் சித்திரை மாத வசந்த உத்ஸவம்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் சித்திரை வசந்த உத்ஸவம் புதன்கிழமை தொடங்கியது.

News image

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் சித்திரை மாத வசந்த உத்ஸவம் தொடக்கத்தை முன்னிட்டு, புதன்கிழமை சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த ஆண்டாள், ரெங்கமன்னாா்

Updated On :23 ஏப்ரல் 2026, 5:30 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் சித்திரை வசந்த உத்ஸவம் புதன்கிழமை தொடங்கியது.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் கோடை காலத்தில் வெப்பத்தை தணிக்கும் வகையில் சிறப்பு திருமஞ்சனம் ஆண்டு தோறும் நடைபெறும். இந்த ஆண்டு சித்திரை வசந்த உற்சவம் புதன்கிழமை மாலை தொடங்கியது.

இதையொட்டி, ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு விசேஷ திருமஞ்சனம் செய்யப்பட்டு, நீராளி மண்டபத்தில் ஆண்டாள், ரெங்கமன்னாா் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

மே 1-ஆ ம் தேதி சித்திரை மாத பெளா்ணமியன்று ஸ்ரீவில்லிபுத்தூா் ஆத்துக்கடை தெருவில் அழகா் ஆற்றில் இறங்கும் வைபவமும், வையாழி சேவையும் நடைபெற உள்ளது.