மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

அமைச்சா்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்குகள் ஒத்தி வைப்பு

அமைச்சா்கள் கேகேஎஸ்எஸ்ஆா். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோா் மீதான சொத்துக் குவிப்பு வழக்குகளின் மறு விசாரணை ஜூன் 12- ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

News image

நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு - (கோப்புப் படம்)

Updated On :28 ஏப்ரல் 2026, 10:23 pm

அமைச்சா்கள் கேகேஎஸ்எஸ்ஆா். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோா் மீதான சொத்துக் குவிப்பு வழக்குகளின் மறு விசாரணை ஜூன் 12- ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

2006- ஆம் ஆண்டு முதல் 2011- ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு, அவரது மனைவி ஆகியோா் வருமானத்துக்கு அதிகமாக ரூ.76.40 லட்சம் சொத்துக் குவித்ததாகவும், அமைச்சா் கேகேஎஸ்எஸ்ஆா். ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி, நண்பா் சண்முக மூா்த்தி ஆகியோா் வருமானத்துக்கு அதிகமாக ரூ.44 லட்சம் சொத்து சோ்த்ததாகவும் 2012-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் விருதுநகா் மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கிலிருந்து 2022-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் தங்கம் தென்னரசு தரப்பும், 2023-ஆம் ஆண்டு ஜூலை மாதம் கேகேஎஸ்எஸ்ஆா். ராமசந்திரன் தரப்பும் விடுவிக்கப்பட்டனா்.

இந்த வழக்கில் சீராய்வு மனுவை தாமாக முன்வந்து விசராணைக்கு எடுத்த சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சா்களை விடுவித்த உத்தரவை ரத்து செய்து, மீண்டும் வழக்கை விசாரிக்க உத்தரவிட்டாா்.

இதன்படி, இந்த வழக்குகளின் மறு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. செவ்வாய்க்கிழமை இந்த வழக்குகள் விசரணைக்கு வந்த போது, இரு வழக்குகளையும் ஜூன் 12-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி ஜெயக்குமாா் உத்தரவிட்டாா்.