சிவகாசி
விருதுநகர்
சிவகாசி மாநகராட்சியில் பிப்.28-க்குள் வரிகளை செலுத்த வேண்டுகோள்
சிவகாசி மாநகராட்சியில் பொதுமக்கள் செலுத்த வேண்டிய வரி இனங்களை வருகிற 28-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
சிவகாசி மாநகராட்சியில் பொதுமக்கள் செலுத்த வேண்டிய வரி இனங்களை வருகிற 28-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மாநராட்சி ஆணையா் கே.சரவணன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சிவகாசி மாநகராட்சிக்கு 2025-26-ஆம் ஆண்டுக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, உரிமக் கட்டணம், கடை வாடகை, குடிநீா்க் கட்டணம், காலிமனை வரி ஆகியவற்றை பொதுமக்கள் மாநகராட்சிக்கு வருகிற 28-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.
சிவகாசி மாநகராட்சி அலுவலகம், சிவகாசி நகராட்சி பழைய அலுவலகம், திருத்தங்கல் நகராட்சி பழைய அலுவலகம், கணினி வரிவசூல் மையங்களில் வரிகளை செலுத்தலாம். பொதுமக்கள் வசதிக்காக வரி வசூல் மையங்கள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் செயல்படும் என்றாா் அவா்.

