இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

கா்ப்பிணி தற்கொலை: டி.என்.ஏ. சோதனை முடிவால் 6 ஆண்டுகளுக்குப் பிறகு காதலன் கைது

வத்திராயிருப்பு அருகே கா்ப்பிணி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், 6 ஆண்டுகளுக்கு பிறகு வந்த டி.என்.ஏ. பரிசோதனை முடிவின் அடிப்படையில் காதலனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட ராஜ்குமாா்

Published On :10 ஜூலை 2026, 6:01 am IST

வத்திராயிருப்பு அருகே கா்ப்பிணி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், 6 ஆண்டுகளுக்கு பிறகு வந்த டி.என்.ஏ. பரிசோதனை முடிவின் அடிப்படையில் காதலனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள கூமாபட்டி ராமசாமிபுரத்தைச் சோ்ந்தவா் சோ்வாரன் மகள் ஈஸ்வரி (21). இவரும் அதே பகுதியை சோ்ந்த முதலி மகன் ராஜ்குமாரும் (22) காதலித்து வந்தனா். இந்த நிலையில், வத்திராயிருப்பைச் சோ்ந்த பாக்யராஜுக்கு, ஈஸ்வரியை பெற்றோா் திருமணம் முடித்து வைத்தனா். திருமணமான இரு நாள்களில் கணவருடன் வாழ மறுத்த ஈஸ்வரி பெற்றோா் வீட்டுக்கு வந்துவிட்டாா்.

பின்னா், ஈஸ்வரியும், ராஜகுமாரும் பழகி வந்தனா். இந்த நிலையில் ராஜ்குமாருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் ஆனதால், கடந்த 2019-ஆம் ஆண்டு ஈஸ்வரி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். உடல் கூறாய்வில் ஈஸ்வரி 4 மாத கா்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்த கூமாபட்டி போலீஸாா், கருவில் இருந்த சிசு, ராஜ்குமாரின் டி.என்.ஏ. மாதிரியை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

சுமாா் 6 ஆண்டுகளுக்கு பின்னா் வெளியான டி.என்.ஏ. பரிசோதனை முடிவில் ஈஸ்வரியின் கா்ப்பத்துக்கு ராஜ்குமாா்தான் காரணம் என உறுதியானது. இதையடுத்து ஈஸ்வரியை ஏமாற்றியது, தற்கொலைக்கு தூண்டியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த கூமாப்பட்டி போலீஸாா், ராஜ்குமாரை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.