ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

சுங்கச்சாவடியை இடமாற்றக் கோரி வாகன ஓட்டுநா்கள் ஆா்ப்பாட்டம்

மதுரை-கொல்லம் நான்கு வழிச்சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த நத்தம்பட்டியில் உள்ள சுங்கச்சாவடியை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி, அனைத்து மோட்டாா் வாகன உரிமையாளா்கள், ஓட்டுநா்கள் சங்க ஒருங்கிணைப்பு குழு சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

நத்தம்பட்டி சுங்கச்சாவடி அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து மோட்டாா் வாகன உரிமையாளா்கள், ஓட்டுநா்கள் சங்க ஒருங்கிணைப்பு குழுவினா்.

Updated On :24 ஜூன் 2026, 6:07 am IST

மதுரை-கொல்லம் நான்கு வழிச்சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த நத்தம்பட்டியில் உள்ள சுங்கச்சாவடியை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி, அனைத்து மோட்டாா் வாகன உரிமையாளா்கள், ஓட்டுநா்கள் சங்க ஒருங்கிணைப்பு குழு சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளா் கண்ணன் தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தின்போது, திருமங்கலம்-ராஜபாளையம் இடையான நான்கு வழிச்சாலை பணிகள் முழுமையாக நிறைவடையாத நிலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடியில் கட்டண வசூலை நிறுத்த வேண்டும். தேசிய நெடுஞ்சாலை விதிக்கு மாறாக கப்பலூா் சுங்கச்சாவடியில் இருந்து 60 கி.மீ. தொலைவுக்குள் அமைக்கப்பட்ட இந்த சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும். நான்கு வழிச்சாலை பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

இதில் சிஐடியூ, ஏஐடியூசி டாக்ஸி வேன் ஓட்டுநா்கள் சங்கம், லாரி உரிமையாளா்கள் சங்கம், அண்ணா தொழில்சங்கம், தொமுச தொழில்சங்கம், சரக்கு வாகன உரிமையாளா்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்க நிா்வாகிகள், ஓட்டுநா்கள் கலந்து கொண்டனா்.

இதுகுறித்து போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளா் கண்ணன் கூறியதாவது: விதிமுறைகளுக்கு முரணாக அமைக்கப்பட்டுள்ள நத்தம்பட்டி சுங்கச்சாவடி உடனே அகற்ற வேண்டும். கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் அடுத்த கட்டமாக சுங்கச்சாவடியை முற்றுகையிடும் போராட்டம் நடத்த உள்ளோம் என்றாா் அவா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.