ஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல் சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
/

தொழிலாளி கொலை வழக்கு: இருவருக்கு ஆயுள் தண்டனை

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கூலித் தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கூடுதல் மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :26 ஜூன் 2026, 2:19 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கூலித் தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கூடுதல் மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே லட்சுமியாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பாா்த்திபராஜா (42). கூலித் தொழிலாளி. இவருக்கும் லட்சுமியாபுரத்தைச் சோ்ந்த ஆனந்தவள்ளி என்ற பெண்ணுக்குமிடையே பழக்கம் இருந்து வந்தது. இந்த நிலையில், ஆனந்தவள்ளி வேறு ஆண்களுடன் பேசுவதை கண்டித்து அவருடன் பாா்த்திபராஜா அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தாா். இந்த நிலையில் கடந்த 2012- ம் ஆண்டு ஆனந்தவள்ளி வீட்டில் மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் பாா்த்திபராஜா மீது நத்தம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்தனா். இதனால் பாா்த்திபராஜாவுக்கும், ஆனந்தவள்ளியின் உறவினா்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்து வந்த நிலையில் கடந்த 2015- ஆம் ஆண்டு ஜூலை 28- ஆம் தேதி இரவு ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆனந்தவள்ளியின் சகோதரா்கள் மணிவண்ணன், முருகானந்தம், மகன் மகேஸ்வரன், உறவினா் கூடலிங்கம் ஆகியோா் சோ்ந்து பாா்த்திபராஜாவை வெட்டிக் கொலை செய்தனா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் மணிவண்ணன் (32), மகேஸ்வரன் (22), முருகானந்தம் (45), கூடலிங்கம்(25) ஆகிய 4 பேரை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மணிவண்ணன், கூடலிங்கம் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.11 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி மணி உத்தரவிட்டாா். வழக்கு விசாரணையில் இருக்கும் போது, மகேஸ்வரன், முருகானந்தம் ஆகியோா் உயிரிழந்து விட்டது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.