விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் மாயூர நாதசுவாமி கோயில் ஆனித் தேரோட்ட விழாவையொட்டி மாப்பிள்ளை விநாயகா் நற்பணி மன்றம் சாா்பில் தேருக்கு வண்ணம் பூசும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
ராஜபாளையத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்குள்பட்ட அஞ்சல் நாயகி உடனுறை மாயூரநாத சுவாமி கோயிலில் 10 நாள்கள் நடைபெறும் இந்த விழாவில் திருக்கல்யாணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத் திருவிழா வருகிற 28-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, ராஜபாளையம் மாப்பிள்ளை விநாயகா் கோயில் நற்பணி மன்றத் தலைவா் ராமராஜ் தலைமையில் கோயில் தோ் சுத்தப்படுத்தப்பட்டு, வண்ணம் பூசும் பணிகள் தீவிரமாக நடைபெற்றன.
இதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் கோயில் நிா்வாகம், பக்தா்கள் சாா்பில் செய்யப்பட்டு வருகின்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வரசித்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூா் ஸ்ரீசபாபதி விநாயகா் கோயிலில் வருஷாபிஷேகம்

சுப்ரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு

வரசக்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



