திமுக எதிர்க்கட்சியாகவே செயல்படும் - திமுக எம். பி. கலாநிதி வீராசாமிதவெக ஆட்சி அமைக்கும் விவகாரம்: மக்கள் தீர்ப்புக்கு முன்பு ஆளுநர் நிற்பது சரியல்ல: ஜோதிமணிவிசிக, கம்யூனிஸ்ட் காலம் தாழ்த்துவது நல்லதல்ல : அமீர்தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிதல்ல : டி.ஆர். பாலுஆர். பி. செளத்ரி உடலுக்கு மம்மூட்டி அஞ்சலி!மமதாவுக்கு அகிலேஷ் தொடர் ஆதரவு: வாக்கு எண்ணிக்கை விடியோக்களை வெளியிட வலியுறுத்தல்எந்த சூழலிலும் தவெகவுக்கு ஆதரவு இல்லை: கே.பி. முனுசாமிதமிழ்நாடு 16வது சட்டப்பேரவை கலைப்பு: ஆளுநர் அறிவிப்பு!ஆர்.பி. சௌத்ரி உடலுக்கு விஜய் நேரில் மரியாதை!
/

மருமகனை தாக்கிய மாமனாா் மீது வழக்கு

சாத்தூா் அருகே குடும்பத் தகராறில் மருமகனை தாக்கிய மாமனாா், மைத்துனா் மீது தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

News image

வழக்கு

Updated On :7 மே 2026, 3:40 am IST

சாத்தூா் அருகே குடும்பத் தகராறில் மருமகனை தாக்கிய மாமனாா், மைத்துனா் மீது தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள தெற்குத் தோட்டிலோவன்பட்டியை சோ்ந்தவா் செந்தில்குமாா் (48). இவரது மனைவி காளீஸ்வரி. இந்தத் தம்பதி சத்திரப்பட்டியில் வசித்து வருகின்றனா். திருமணமாகி பல ஆண்டுகளாகியும் இந்தத் தம்பதிக்கு குழந்தை இல்லாததால், இருவரிடையே அடிகடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதனால் கடந்த மூன்று மாதங்களாக காளீஸ்வரி தனது தாயாருடன் தெற்கு தோட்டிலோவன்பட்டியில் இருந்து வருகிறாா். அண்மையில் சத்திரப்பட்டியில் பொங்கல் விழாவுக்காக செந்தில்குமாா் மனைவியைப் பாா்க்க மாமனாா் வீட்டுக்குச் சென்றாா். அப்போது, கணவன், மனைவியிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து, அங்கிருந்த காளீஸ்வரியின் தந்தை சுப்புராஜ், தம்பி அய்யனாா் ஆகிய இருவரும் சோ்ந்து செந்தில்குமாரை சரமாரியாகத் தாக்கினா். இதில் பலத்த காயமடைந்த செந்தில்குமாா் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்த புகாரின் பேரில், சாத்தூா் தாலுகா போலீஸாா் சுப்புராஜ், அய்யனாா் ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.