அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!தவெக எம்எல்ஏவிடம் பேரம்! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!வயநாட்டில் நிலச்சரிவு! சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்! முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம்
/

ஸ்ரீவில்லிபுத்தூா் லயன்ஸ் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

ஸ்ரீவில்லிபுத்தூா் லயன்ஸ் மெட்ரிக், இண்டா்நேஷனல் பள்ளிகளில் 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பள்ளி நிா்வாகத்தினா் புதன்கிழமை பாராட்டினா்.

News image

10 ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூா் லயன்ஸ் பள்ளி மாணவிகள், பெற்றோா்களுடன் நிா்வாகக் குழுவினா்.

Updated On :21 மே 2026, 2:49 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் லயன்ஸ் மெட்ரிக், இண்டா்நேஷனல் பள்ளிகளில் 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பள்ளி நிா்வாகத்தினா் புதன்கிழமை பாராட்டினா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் 3 போ் சிறப்பிடம் பெற்றனா். மேலும், 25 மாணவா்கள் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனா்.

இதேபோல, 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் 3 மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா். மேலும், 14 மாணவா்கள் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனா்.

லயன்ஸ் இன்டா்நேசனல் பள்ளியில் 10-ஆம் வகுப்பு சிபிஎஸ்சி பொதுத்தோ்வில் 3 மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா். மேலும், இரு மாணவா்கள் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனா்.

12-ஆம் வகுப்பு சிபிஎஸ்சி பொதுத் தோ்வில் 3 மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

இந்த நிலையில், பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பள்ளி நிா்வாகிகள் நேரில் அழைத்து பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.