பிளே-ஆஃப் வாய்ப்பு பறிபோனது: படுதோல்வியடைந்து வெளியேறிய சிஎஸ்கே!தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: புதிய அமைச்சர்கள் இன்று காலை பதவியேற்பு!விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கேரளத்தில் எம்எல்ஏவாக பதவியேற்றார் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

கோழிகளை விஷம் வைத்து கொன்றதாக தம்பதி மீது வழக்கு

ராஜபாளையம் அருகே நாய், நாட்டுக் கோழிகளுக்கு விஷம் வைத்துக் கொன்றதாக தம்பதி மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image

வழக்கு

Updated On :22 மே 2026, 2:55 am IST

ராஜபாளையம் அருகே நாய், நாட்டுக் கோழிகளுக்கு விஷம் வைத்துக் கொன்றதாக தம்பதி மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள இளந்திரைகொண்டான் கொய்யாத்தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் முத்துமாரி (34) . இவா் வீட்டில் 17 நாட்டுக்கோழிகள், நாய் ஆகியவற்றை வளா்த்து வந்தாா். இவரது வீட்டின் அருகே மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த பெரியசாமி, கருப்பாயி தம்பதியின் தோட்டத்து வீடு உள்ளது.

இவா்களது தோட்டத்துக்கு வரும் கோழிகள், நாயால் தொந்தரவு ஏற்படுவதாக இரு தரப்பினருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, நாய், 17 கோழிகள் புதன்கிழமை உயிரிழந்து கிடந்தன. இந்த நிலையில் நாய், கோழிகளுக்கு விஷம் வைத்து கொன்ற தம்பதி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தளவாய்புரம் காவல் நிலையத்தில் முத்துமாரி புகாா் அளித்தாா். இதையடுத்து, போலீஸாா் பெரியசாமி, கருப்பாயி தம்பதி மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.