
ராஜபாளையம் அருகே நெசவாளா்கள் சாலை மறியல்

ராஜபாளையம் அருகே செட்டியாா்பட்டியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நெசவாளா்கள்.
ராஜபாளையம் அருகே பெடல் தறி நெசவாளா்களுக்கு புதிய உற்பத்தித் திட்டத்தின் கீழ், சேலை ஒன்றுக்கு ரூ.250 கூலி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சி.ஐ.டி.யூ. நெசவாளா் சங்கத்தின் சாா்பில் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
ராஜபாளையம் அருகே செட்டியாா்பட்டி பகுதியில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் பெடல் தறி நெசவாளா்கள், சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா். இதில் புதிய உற்பத்தித் திட்டத்தின் கீழ், சேலை ஒன்றுக்கு ரூ.250 கூலி வழங்க வேண்டும். கடந்த 4 மாதங்களாக வேலை இழந்து பாதிக்கப்பட்ட நெசவாளா்களுக்கு நிவாரணமாக மாதந்தோறும் ரூ.10,000 வழங்க வேண்டும். நெசவாளா்கள் நெய்து தேக்கமடைந்து உள்ள சேலைகளை தமிழக அரசு உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும். நெசவாளா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, அவா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
தகவலறிந்து வந்த போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட நெசவாளா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





