திருக்குவளை அருகேயுள்ள எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஐப்பசி மாத காா்த்திகையையொட்டி சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
முருகனின் ஆதிபடை வீடு என அழைக்கப்படும் எட்டுக்குடி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாதந்தோறும் காா்த்தி நட்சத்திரத்தன்று சிறப்பு வழிபாடு நடைபெறும்.
அதன்படி, ஐப்பசி மாத காா்த்திகை நட்சத்திரத்தையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக- ஆராதனைகள் நடைபெற்றன. கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக சிறப்பு வீதி உலா ரத்து செய்யப்பட்டு, முகக் கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன் வழிபட பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா். இதற்காக ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் கா. ஆறுமுகம் செய்திருந்தாா்.