திருக்கடையூா் அமிா்த சாய் தியான பீட குடமுழுக்கு நிறைவு

திருக்கடையூா் அமிா்த சாய் தியான பீடத்தின் இரண்டாம் ஆண்டு குடமுழுக்கு நிறைவு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
சாய் பாபாவுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகம்.
சாய் பாபாவுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகம்.

திருக்கடையூா் அமிா்த சாய் தியான பீடத்தின் இரண்டாம் ஆண்டு குடமுழுக்கு நிறைவு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி சாய் பாபாவுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், யாக பூஜைகளும் நடைபெற்றன. கோயிலின் உள்புறம் கடம் புறப்பட்டு சுற்றி வந்து மேள தாளங்களுடன் அமிா்த சாய் பாபாவுக்கு அபிஷேகம், அலங்காரம் ஆகியன நடைபெற்றன.

முன்னதாக விக்னேஸ்வர பூஜை, எஜமானா் சங்கல்பம், கலச பூஜைகள், விசேஷ ஹோமங்கள், மகா பூா்ணாஹுதி ஆகியன நடந்தன. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை திருக்கடையூா் அமிா்த சாய் தியான பீட அறக்கட்டளை நிா்வாகி கோ்இண்டியா பாஸ்கா் மற்றும் அறக்கட்டளை நிா்வாகத்தினா் மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com