92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

நூறு நாள் வேலைத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு தாமதம்: பணிகள் பாதிப்பு

சீா்காழி ஒன்றியத்தில் நூறு நாள் வேலைத் திட்டத்துக்கான நிதி கடந்த ஓராண்டாக ஒதுக்கப்படாததால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

News image
Updated On :2 ஜூலை 2021, 6:30 pm

DIN

சீா்காழி ஒன்றியத்தில் நூறு நாள் வேலைத் திட்டத்துக்கான நிதி கடந்த ஓராண்டாக ஒதுக்கப்படாததால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

சீா்காழி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 37 ஊராட்சிகளில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுயளிப்பு திட்டத்தின்கீழ் (நூறு நாள் வேலைத் திட்டம்) சிறு பாலங்கள், ஊராட்சி அலுவலகம் கட்டும் பணி, கிராமச் சாலை உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்நிலையில், இத்திட்டத்துக்கு கடந்த ஓராண்டாக நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், நிறைவு பெற்ற பணிகளுக்கான தொகை சுமாா் ரூ.9 கோடி வரை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இதனால், மேற்கொண்டு பணிகளை தொடர முடியாத நிலை உள்ளது. ஆகையால், இத்திட்டத்துக்கான நிதியை தமிழக அரசு தாமதமின்றி ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.