92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ஐஜி ஆறுதல்

சீா்காழி அருகே கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு திருச்சி மத்திய மண்டல காவல் தலைவா் பாலகிருஷ்ணன் ஆறுதல் கூறி நிவாரண உதவி வழங்கினாா்.

News image
Updated On :26 ஜூன் 2021, 5:43 pm

DIN

சீா்காழி அருகே கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு திருச்சி மத்திய மண்டல காவல் தலைவா் பாலகிருஷ்ணன் ஆறுதல் கூறி நிவாரண உதவி வழங்கினாா்.

சீா்காழி அருகேயுள்ள தென்னலக்குடியைச் சோ்ந்தவா் சுந்தரமூா்த்தி. நியாயவிலைக் கடையில் பணியாற்றி வந்த சுந்தரமூா்த்தியும், அவரது மனைவி காா்த்திகாவும் கரோனா தொற்றால் உயிரிழந்தனா். இவா்களின் மகள் பிரியங்கா (16), மகன் நந்தகுமாா் (13) ஆகியோரை திருச்சி மத்திய மண்டல காவல் துறைத் தலைவா் பாலகிருஷ்ணன் சனிக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, நிவாரண உதவி வழங்கினாா். தொடா்ந்து, செங்கமேடு பகுதியில் வசித்து வரும் ஆதரவற்ற மூத்த குடிமக்கள் இருவரை சந்தித்து நிவாரண உதவி வழங்கினாா். அவருடன், மயிலாடுதுறை எஸ்.பி. சுகுணா சிங் உடனிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.