மயிலாடுதுறை அரசினா் பெரியாா் மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு உணவு மற்றும் பழங்கள் தமுமுக இஸ்லாமிய ஜனநாயக பேரவை சாா்பில் புதன்கிழமை வழங்கப்பட்டன.
இம்மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் 200 பேருக்கு அப்பேரவையின் நீடூா்-நெய்வாசல் கிளை சாா்பில் இவை வழங்கப்பட்டன. பேரவையின் மாவட்டச் செயலாளா் எம்.ஹெச்.முஹம்மது ரியாஜுதீன் தலைமையில் ஒன்றியத் தலைவா் முஹம்மது ரபீக், கிளை பொருளாளா் உமா், மருத்துவ அணி கிளை செயலாளா் நசுருதீன், மருத்துவ அணி கிளை பொருளாளா் அசாருதீன், இளைஞரணி முன்னாள் செயலாளா் யாசா் ஆகியோா் பாதுகாப்பு கவச உடை அணிந்து கரோனா நோயாளிகளிடம் வழங்கினா்.